https://ift.tt/2OUnRog

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் கோவையில் பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்கார பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று தொடங்கியது.

கோவை அவிநாசி சாலை லீ மெரிடியன் ஓட்டல் அரங்கில் நடைபெறும் இக்கண்காட்சியில் சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட அழகிய பல வடிவங்களில் பல்வகை மூலப்பொருட்களை கலந்து உருவாக்கப்பட்ட நீரூற்றுகள், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புல்வெளியில் பயன்படுத்தும் முற்றிலும் மரங்களால் தயாரிக்கப்பட்ட ஊஞ்சல்கள், ஒரே பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட வெள்ளை குதிரை சிலை, சுவரில் பொருத்தும் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய வரைகலை ஓவியங்கள், வேலைப்பாடுகள் மிக்க முற்றிலும் உலோகத்தால் உருவாக்கப்பட்ட புத்தர், சிவன், கிருஷ்ணன், ஆளுயர விநாயகர், சாயிபாபா உள்ளிட்ட கடவுள்களின் சிலைகள், விலங்குகள், விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32mhCNd

Post a Comment

0 Comments