https://ift.tt/2QbS6HS

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடந்தேறியுள்ளது. வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல், தேர்தல் பணிக்கு ஊழியர்களை நியமித்தல், பயிற்சி அளித்தல், வாக்குச்சாவடிகள் நிறுவுதல், குறிப்பாக கரோனா பரவல்காரணமாக கூடுதலான வாக்குச்சாவடிகளை அமைத்தல் ஆகிய பணிகள் அடுத்தடுத்து நடைபெற்றன.

மேலும், தேர்தல் ஆணையம் நியமித்த பார்வையாளர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அடங்கிய பெரும் படையின் உதவியுடன் தேர்தல் செலவினங்களைக் கண்காணித்து பரிசீலித்தல் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றில், மலைக்கச் செய்யும் அளவில் தேர்தல் இயந்திரத்தின் பெருமுயற்சி அடங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gmYSFl

Post a Comment

0 Comments