
வேளச்சேரியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் 92-வது எண் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் நேற்று வீடுவீடாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், சென்னை வேளச்சேரி தொகுதியில் சீதாராம் நகர், டிஏவி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 92-ல் இருந்து 2 மின்னணு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரத்தை அதற்குரிய வழிமுறைகள்படி அல்லாமல் இருசக்கர வாகனத்தில் ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதை எடுத்துச் சென்றவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3afWZGS
0 Comments