https://ift.tt/2ROkIaN

தொழிலதிபரை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பலை சினிமா பாணியில் தாராபுரம் போலீஸார் மடக்கிப் பிடித்து, பின்தொடர்ந்து வந்த விழுப்புரம் போலீஸார் வசம் ஒப்படைத்தனர். சொகுசு கார் மற்றும் கைத் துப்பாக்கி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு, நேற்று காலை வெள்ளகோவில் போலீஸாரிடமிருந்து ஒரு தகவல் அளிக்கப்பட்டது. அதில், கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் சொகுசு காரில் மர்ம கும்பல் இருப்பதாகவும், தாராபுரம் பகுதியை கடந்து செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உதவி ஆய்வாளர் முனியப்பன் தலைமையிலான நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், தாராபுரம் மத்திய பேருந்து நிலையப் பகுதியில் காரை மடக்கி பிடித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32sDiHk

Post a Comment

0 Comments