
கரோனா கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் கோவையில் அனைத்து தொழில்நிறுவனங்களும் இரவில் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனதமிழக அரசுக்கு கோவை தொழில் துறையினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல்தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இன்று(ஏப்ரல் 20) முதல் கூடுதல் கட்டுப்பா டுகள், தடைகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல் முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தொழில் நகரமான கோவையில், இந்த இரவு நேர கட்டுப்பாட்டிலிருந்து அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என தொழில் துறையினர் சார்பில் தமிழகஅரசுக்கு கோரிக்கை முன் வைக் கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sywzpZ
0 Comments