
மதுரை வைகை ஆற்றில் ஓபுளா படித்துறை தரைப்பாலத்தில் மிகப் பெரிய பள்ளத்தால் தொடர் விபத்துகள் நடக்கின்றன. இதனால் இப்பாலத்தில் ஓட்டுநர்கள் அச்சத் துடன் வாகனங்களை ஓட்டிச் செல் கின்றனர்.
மதுரை ஓபுளா படித்துறை தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பள்ளம் காரணமாக அடிக்கடி வாகன விபத்து நடக்கிறது. படம்: ஜி.மூர்த்தி ஓபுளா படித்துறை அருகே வைகை ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. தடுப்புச்சுவர்கூட இல்லாத இப்பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wRqQPB
0 Comments