
மூலப்பொருட்களின் விலை உயர்வால் கோவை மாவட்டத்தில் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனங்களின் பிரதான நம்பிக்கையாக ஜாப் ஆர்டர்கள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் விலை உயர்வு தொழில் துறையினரை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ac24Qy
0 Comments