
ஆந்திராவில் பதுங்கி இருந்த கஞ்சா கும்பலை பிடிக்க முயன்ற சென்னை தனிப்படை போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 2 போலீஸார் காயம் அடைந்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிக அளவில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சென்னை பெருநகரில் `போதை தடுப்புக்கான நடவடிக்கை' மூலம் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தனிப்படை அமைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aLPOpZ
0 Comments