
பணிக்கால முறைகேடு புகார்கள் தொடர்பாக, முன்னாள் துணைவேந்தர் சுரப்பாவை நேரடி விசாரணைக்கு அழைக்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஒய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது அவர் மீது புகார் அளித்தவர்கள் மற்றும் சாட்சிகளிடம் இறுதிக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிந்தபின் சுரப்பாவை விசாரணைக்கு அழைக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான நோட்டீஸ் விரைவில் சுரப்பாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xu5GHx
0 Comments