
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே தடுப்பூசி மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 9 அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி மருத்துவமனை, 14 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அரசு காப்பீடு பட்டியலில் உள்ள 49 தனியார் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3e5HhR6
0 Comments