https://ift.tt/3vA8qBx

கரோனா தொற்று பரவல் காரணமாக வாழப்பாடியில் இருந்து மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு தேங்காய்களை விற்பனைக்கு அனுப்ப முடியாததால், விலை வீழ்ச்சியடைந்திருப்ப தாக வாழப்பாடி வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தேங்காய் மொத்த விற்பனையில் தமிழக அளவில் முக்கிய இடங்களில் ஒன்றாக, சேலம் மாவட்டம் வாழப்பாடி உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மண்டிகளில் தேங்காய் மொத்த வியாபாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆத்தூர், திம்மநாயக்கன்பட்டி, ராசிபுரம் என சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் உள்ள தோட்டங்களில் இருந்து வியாபாரிகள் மூலம் மண்டி உரிமையாளர்கள் நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2R9lqPE

Post a Comment

0 Comments