
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், சுற்றுலா பயணிகள் இன்றி மாமல்லபுரம் வெறிச்சோடியது. பின்னர், அரசின் பல்வேறு தளர்வுகளால் மீண்டும் கலைச்சின்ன வளாகங்கள் திறக்கப்பட்டன.
ஆனால், வெளிநாட்டு பயணிகள் இன்றி, உள்ளூர் சுற்றுலா பயணிகளே அதிகளவில் வந்து சென்றனர். தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39Xop45
0 Comments