
கரோனா பரவல் காரணமாகதமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்ய ஏப்.26 முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்தது. இதனால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி தரிசனம் மற்றும் சித்திரை வசந்த உற்சவ தீர்த்தவாரியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல், சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்றுமுன்தினம் இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால், கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aJw2LX
0 Comments