
மதுரை அழகர்கோவில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கோயில் வளாகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மாதிரி வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் வெண் பட்டு உடுத்தி கள்ளழகர் நேற்று இறங்கினார். இதை பக்தர்கள் காணும் வகையில் கோயில் இணையதளங்களில் ஒளிபரப்பப்பட்டது.
வழக்கமாக மதுரை சித்திரை திருவிழா என்றால், கள்ளழகர் மதுரை புறப்பாடு, வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளல், மூன்று மாவடியில் பக்தர்கள் திரண்டு அழகரை அழைக்கும் எதிர்சேவை, அடுத்த நாள் அதிகாலையில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளல், பின்னர் தங்கக்குதிரை வாகனத்தில் பல லட்சம் பக்தர்கள் சூழ வைகை ஆற்றில் இறங்குதல் என கள்ளழகர் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vjOYbO
0 Comments