
கட்டிடங்களுக்கு புதிய மின் இணைப்பு பெற்ற பிறகு, விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டால் எந்த புகாரும் அளிக்க மாட்டேன் என்ற உறுதிமொழி படிவத்தைப் பெற்று புதிய இணைப்புகளை வழங்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மின்வாரியதலைமை அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு கடந்த 16-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மின்இணைப்பு கோருபவர்கள் சிறப்பு திட்டத்தின்கீழ் மின்இணைப்பு பெறுவதற்கு சிலநிபந்தனைகள் விதிக்கப்ட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் அடங்கிய உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே மின் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகளில், "கட்டிடத்தின் உயரம் 12 மீட்டருக்குள் இருக்க வேண்டும். அலுவலர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்யும்போது கட்டிடத்தின் உயரம் 12 மீட்டருக்கு மேல் இருந்தால் மின் இணைப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ துண்டிப்பு செய்யப்படும். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n0v2rS
0 Comments