
புதுச்சேரியில் புகழ்பெற்ற வாரச்சந்தை யில் கரோனா கட்டுப்பாடுகள் ஏதும் கடைபிடிக்கப்படவில்லை. கொம்யூன் அதிகாரிகளும் கரோனா விழிப்புணர்விலோ, கண்காணிப்பிலோ ஈடுபடவில்லை.
புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டு கிராமத்தில் செவ்வாய்தோறும் நடைபெறும் வாரச்சந்தை மிக பிரபலமானது. பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில்இருந்து 2 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இந்த சந்தையில் கோயம்புத்தூர், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், பண்ருட்டி, பெங்களுர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பழங்கால முறைப்படி கையில் துண்டு போட்டு பேரம் பேசி விற்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uNu0Sr
0 Comments