
நாட்டின் கலாச்சார மேன்மையையும் பெருமையையும் அனைவரும் அறியும் வண்ணம் செய்த சேவாசுவாமி மெமோரியல் பவுண்டேஷன் சார்பில் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஸ்ரீ தேசிக தர்சன பஞ்சாங்கம் (பிலவ வருடம் – 2021-22) அண்மையில் வெளியிடப்பட்டது.
சேவா சுவாமி என்று அனைவராலும் அழைக்கப்படும் அரசாணிப்பாலை நல்லூர் ஸ்ரீனிவாச ராகவாச்சாரியார் சுவாமிகளால் 1972-ல்தொடங்கி, தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் ஸ்ரீ தேசிக தர்சன பஞ்சாங்கம், இந்த ஆண்டு தனது 50-வது இதழை வெளியிட்டது. தமிழ்,தெலுங்கு வருடப்பிறப்பை ஒட்டி ஒவ்வொரு வருடமும் அந்தந்த வருடத்துக்கான பஞ்சாங்கம் வெளியிடப்படுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s3JgZy
0 Comments