
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளதால், மாநில எல்லைகளில் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதியகட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wB8AtL
0 Comments