
பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும், நின்று கொண்டு பயணிக்கக் கூடாது என்ற புதிய கட்டுப்பாடு நேற்று முதல் அமலானது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால், தமிழக அரசு நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள்அமர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் அதிகமாக ஏறுவதைநடத்துநர்களும் அனுமதிக்கவில்லை. இவற்றை பேருந்து நிலையங்களில் போக்குவரத்து கழக அதிகாரிகள் நின்று கொண்டு ஆய்வு செய்தனர். பல இடங்களில் முகக்கவசம் இல்லாத பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3d7cSRJ
0 Comments