
கரோனா தொற்று காரணமாக, மின் கணக்கீடு எடுக்க ஊழியர்கள் வீடுகளுக்கு வராததால், கூடுதலாக மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா பரவத் தொடங்கியதையடுத்து, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மின் கணக்கீடு செய்ய ஊழியர்கள் வீடுகளுக்குச் செல்லவில்லை. இதையடுத்து, 4 மாதங்களுக்கு சேர்த்து கணக்கெடுக்கப்பட்டு, அதை இரண்டிரண்டு மாதங்களாக பிரித்து கட்டுமாறு மின்வாரியம் தெரிவித்தது. ஆனால், கணக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகளால், பல மின்நுகர்வோர் ஆயிரக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mU4jwQ
0 Comments