
தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ள நிலையில், இன்று 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு அனுப்புவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் மையங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. கடந்த 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்ற தடுப்பூசி திருவிழாவில் சுமார் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nddoRP
0 Comments