
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல் லூர் அருகே அத்தாளநல்லூரில் உள்ள மூன்றீஸ்வரமுடையார் கோயில் மண்டபத்தில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து புனித த்தை கெடுத்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அங்கு செயல்பட்ட அரசு நெல்கொள்முதல் நிலையம் மாற்றப்பட்டு, நெல் மூட்டைகள் அகற்றப்பட்டன.
அத்தாளநல்லூரில் அமைந் துள்ள மூன்றீஸ்வரமுடையார் கோயிலில் மரகதவல்லி தாயார் சந்நிதி தவிர விநாயகர், சுப்பிர மணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய உபசந்நிதிகளும் அமைந்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் 2 கால பூஜைகளும், சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவிழாவும் நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tjwAzj
0 Comments