
மதுரை காமராசர் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப் படுவதால், ‘ஆல் பாஸ்' என அறி விக்கப்பட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை காமராசர் பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் 70 அரசுக் கல்லூரிகள், 30-க்கும் மேற்பட்ட தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளன. இளநிலை, முதுநிலை என மொத் தம் 27 ஆயிரம் மாணவ, மாணவிகள் இறுதித்தேர்வு எழுத இருந்தனர். கரோனா ஊரடங்கால் நேரடித் தேர்வு நடத்த முடியவில்லை. இதையடுத்து, இறுதி ஆண்டு மாணவர்கள் ‘ஆல் பாஸ்' என அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சில பல் கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கிய நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 6 ஆயிரம் பேருக்கு மேல் சான்றிதழ் கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படு கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3v1AVb5
0 Comments