
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் பலகைகளில் மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா சாலை என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.
சென்னையில் முத்துசாமி பாலத்தில் இருந்து மதுரவாயல் சந்திப்பு வரையிலான சாலை, `பூந்தமல்லி நெடுஞ்சாலை’ எனவும், `பெரியார் ஈ.வெ.ரா. சாலை’ எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இதில் `ஈ.வெ.ரா. பெரியார் சாலை’ என்ற பெயர் எந்த முன்னறிவிப்பும் இன்றி, `கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு’ என்று பெயர் மாற்றப்பட்டு, சாலை நெடுகிலும் சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை சார்பாக போர்டுகள் வைக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dpKDhh
0 Comments