
மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகளை நிறுத்திய மாநகராட்சியை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட, கடைக்காரர்கள் மற்றும் மீனவ அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மெரினா கடற்கரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு கடைகள் நடத்தப்பட்டு வந்தன. அங்கு குற்றச் செயல்கள் அதிகரிப்பது, அசுத்தமாக இருப்பது போன்ற பிரச்சினைகள் இருந்தன. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்ட நிலையில், கடற்கரையில் நடத்தப்படும் கடைகளை முறைப்படுத்த அதன் பரப்பு மற்றும் கொள்திறன் அடிப்படையில் 900 கடைகளை மட்டும் அனுமதிக்க மாநகராட்சி முடிவு செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vj9yJl
0 Comments