
நீலகிரி மாவட்டம் உதகையில் குதிரை பந்தயம் நேற்று தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசனின் முக்கிய நிகழ்வான குதிரைப் பந்தயம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெறும். இந்த ஆண்டு 134-வது குதிரைப் பந்தயம் நேற்று (ஏப்ரல் 14) தொடங்கியது. பந்தயங்கள் ஜூன் மாதம் 11-ம் தேதி வரை நடக்கவுள்ளது. வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3acU95o
0 Comments