
கரோனா தொற்று பரவலால் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், திரையரங்குகளுக்கு சொத்து வரி உள்ளிட்ட அம்சங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நேற்று (ஏப்.26) முதல் திரையரங்குகள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள் உள்ளிட்டவற்றை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, கோவையில் ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சரவணம்பட்டி, நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக மைய வளாகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களில் உள்ள திரையரங்குகள், சிங்காநல்லூர், டவுன்ஹால், கல்லூரி சாலை, 100 அடி சாலை, மேட்டுப்பாளையம் சாலை உட்பட மாநரின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகள், புறநகர் பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மூடப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32SSZI4
0 Comments