
உடுமலை அருகே புக்குளத்தில் திட்டக் காலம் முடிந்த பின்னரும் தொடரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி எப்போது நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த புக்குளத்தில், கடந்த 2018 ஏப்.18-ம் தேதி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 320 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ.26.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தரைத்தளத்துடன் சேர்த்து 4 தளங்களை கொண்ட 4 பிளாக்குகளாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டப் பணி, கடந்த ஜனவரி 31-ம் தேதி நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது ஒப்பந்த விதி. வீடுகள் அடங்கிய அடுக்குமாடி திட்டப் பணிகள் நிறைவடைந்து வண்ணம் பூசப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தில் உள்ள சமூக நலக்கூடம், அங்காடி உள்ளிட்ட கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nmKDSH
0 Comments