
மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ நிதியை கொட்டி வைகை ஆற்றில் தடுப்பணைகள் கட்டிய 21 கோடி ரூபாய் வீணாகியுள்ளது. தற் போது அந்த தடுப்பணைகளில் கழிவு நீர் மட்டுமே தேங்குவதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, வைகை அணையில் தண்ணீர் திறந்துவிடாவிட்டாலும் ஆங்காங்கே ஆற்று வழித்தடத்தில் இணையும் கிளை நீரோடைகளில் இருந்து வரும் தண்ணீர் ஆற்றில் கலந்து ஆண்டு முழுவதும் வைகை ஆற்றில் நீரோட்டம் காணப்படும். அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் இரு கரைகளையும் தொட்டபடி வைகை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3giVxas
0 Comments