https://ift.tt/3nk7Rsv

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்காக பிரத்யேக கரோனா மருத்துவமனைகளை அமைக்கும் முயற்சியில் ‘கிரெடாய்’ உறுப்பினர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், கடந்த முறை போல அவதிப்பட நேரிடுமோ என்ற அச்சத்தில் கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கட்டுமானப் பணி, ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு ரயில்களில் கூட்டம் கூட்டமாகச் செல்லத் தொடங்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ndaOLj

Post a Comment

0 Comments