
முறைகேடாக மண் திருடி கடத்தும் நபரிடம் இருந்து லஞ்சமாக சொகுசு கார் வாங்கிய புகாரில் முன்னாள் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியரும், தற்போது ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளராக உள்ள முருகேசன் உட்பட 19 பேர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை சார் ஆட்சியராக இருப்பவர் இளம்பகவத். இவருக்கு, கடந்த 25-03-2019-ல் வரப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் சோளிங்கர் அருகேயுள்ள புலிவலம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தும் கும்பலை பிடிக்க வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்று திடீர் ஆய்வு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32NOu1s
0 Comments