
கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் உற்பத்தி சார்ந்து உள்ள தொழில் நிறுவனங்களில், ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு கட்டிங் உள்ளிட்ட பணிகளுக்கு ஆக்சிஜன் தேவை உள்ளது. கரோனா தொற்றின் தீவிரம் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், மருத்துவ உபயோகத்துக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரிகள் வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோவையில் ஆக்சிஜன் தேவையுள்ள தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aFs0UH
0 Comments