
குறுகிய தூரப் பேருந்துகளில் பயணிகள் அதிகளவில் நின்றுகொண்டே பயணிப்பதால், கரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கூட்டமாக பயணிப்பதை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, பேருந்துகளில் அமர்ந்து செல்ல மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா அச்சம் காரணமாக மக்கள் வெளியூர் பயணத்தை தவிர்ப்பதால் வெளியூர் விரைவு, சொகுசு பேருந்துகள் கூட்டமின்றி காணப்படுகின்றன. இருப்பினும், மக்கள் அன்றாடம் வேலைக்கு செல்வதால் நகர, மாநகர, குறுகிய தூர பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் குழுவாக செல்வதால், பேருந்துகளில் நின்று கொண்டே பயணம் செய்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3t5GKCK
0 Comments