
நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத்தேர்தலில், முக்கிய கட்சிகள் இணைய வழி பிரச்சாரத்தில் தீவிர முனைப்பு காட்டின. குறிப்பாக இளைய தலைமுறை வாக்காளர்களை இது பெரிதும் கவரும் என்றும், இந்த நவீன கணினி உலகில் இது வாக்காளர்களை எளிதில் சென்றடையும்என்றும் நம்பின. ஆனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே காணப்பட்டது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு கரோனா தொற்று 2-வது அலை பரவி வருவது முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. கரோனா தொற்று உள்ளவர்கள் வாக்களிக்க வசதியாக மாலை 6 முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் கரோனா தொற்று உள்ளவர்கள் ஒருசிலர் மட்டுமே வாக்களிக்க வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3my8tuh
0 Comments