
திருவள்ளூரில் உள்ள பழமையான வீரராகவ பெருமாள் கோயிலுக்கு, ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் தெப்பக் குளத்தில் நீராடி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, சுவாமியை வழிபடுவர்.
இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நேற்று முன்தினம் மதியம் முதல், அமாவாசை நாளான நேற்று இரவு வரை பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்த கோயில் நிர்வாகம், நேற்று கோயிலை பூட்டியிருந்தது. இதுகுறித்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sc9s4t
0 Comments