விளையாட்டாய் சில கதைகள்: ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் நாடுகள்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக மற்ற நாடுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தயாராகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில், இப்போட்டியை நடத்தவுள்ள ஜப்பான் நாட்டின் மக்களிடையே கரோனா காலத்தில் ஒலிம்பிக் போட்டி தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளதாம். ஒலிம்பிக் போட்டியை மேலும் ஓராண்டு தள்ளிவைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும் வெளிநாட்டு பார்வையாளர்களை அனுமதிக்காமல், உள்ளூர் பார்வையாளர்களைக் கொண்டு எப்படியாவது ஒலிம்பிக் போட்டியை நடத்தியாக வேண்டும் என்பதில் ஜப்பான் அரசு தீவிரமாக உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதிவரை ஜப்பானில் 1 சதவீத மக்கள் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. வீரர்களுக்கும் இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்பதால், திட்டமிட்டபடி போட்டி நடக்குமா என்ற கேள்வி அந்நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments