
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் பொதுமக்களுக்கு புதிய குடும்ப அட்டைவழங்க தலா ரூ.500 லஞ்சம் வாங்கிய வட்ட வழங்கல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியரால் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
குஜிலியம்பாறை தாலுகா வறண்ட பகுதி. இப்பகுதியில் கூலித் தொழிலாளர்களே அதிகம்வசிக்கின்றனர். இவர்களில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)இல்லாத பலர் புதிதாக விண்ணப்பித்திருந்தனர். தகுதியின் அடிப்படையில் விசாரித்து இவர்களுக்கான புதிய குடும்ப அட்டை வழங்க தயார்நிலையில் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3owKiNU
0 Comments