
விழுப்புரம் அருகே குமளம் கிராமத்தில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்நிலையத்தில் 10 பேர் கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ”குமளம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 10 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகிறோம். இந்த நிலையில், திமுகவினர் 10 பேர் எங்களிடம் வந்து நீங்கள் வேலை செய்யக் கூடாது; சென்று விடுங்கள். எங்கள் ஆட்கள் வேலைக்கு வருவார்கள். நெல் கொள்முதல் நிலையம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மிரட்டுகிறார்கள். இந்த ஆட்சியில் மிரட்டல் இருக்காது என்று நம்பினோம். ஆனால் நடப்பது வேறாக உள்ளது” என்று பேசியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fuTJsN
0 Comments