
கரோனா நோயாளிகளை காக்க கூடுதலாக திறக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய, பிட்டர் பயிற்சி முடித்தவர்கள் அதிக அளவில் தேவைப்படுவதாக பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கரோனா 2-வது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், ஆக்சிஜன் தட்டுப்பாடால் மக்கள் உயிரிழப்பதை தடுக்க, கூடுதல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை, மதுரை, கோவைஉட்பட 14 இடங்களில் ஆக்சிஜன்உற்பத்தி ஆலைகளைத் தொடங்கபோர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o902pQ
0 Comments