
வேலூர் மாநகரில் ஊரடங்கு நேரத்தில் வாகனங்களில் சுற்றுபவர்களை பிடிக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி சுற்றுபவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கில் இளைஞர்கள் சிலர் இரு சக்கர வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில் முக்கிய சந்திப்புகளில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனால், அதையும் மீறி வாகனங்களில் சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oXtHTy
0 Comments