https://ift.tt/2S6LXh2

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு காய்கறி கடைகளை மாற்றும் ஆட்சியர் உத்தரவை ஏற்க பெரிய மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று முதல் கடையடைப்பு நடத்தவும் முடிவு எடுத்துள்ளனர்.

புதுவையில் கரோனா 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 1,500 பேருக்குதொற்று ஏற்படுகிறது. சராசரியாக 25 பேர் உயிரிழந்து வருகின்றனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்கஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் 24-ம்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fnQh3j

Post a Comment

0 Comments