
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருந்த வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் தங்குமிடம், உணவு வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. 15-ம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு பயணச் சீட்டுகளுடன் கிடைத்த வாகனங்களில் சென்னை சென்ட்ரலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ரயில்களில் சொந்த ஊர் செல்ல வேண்டியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hwIe6L
0 Comments