https://ift.tt/349nn1G

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்ட வழக்குகளை ரத்து செய்திருப்பதைப் போல, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், முப்போகமும் விளையும் பகுதிகளில் ஒன்றான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனத்துக்கு கடந்த 2017-ல் மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் 200 நாட்களுக்கும் மேலாக தொடர் மக்கள் போராட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இதேபோல, வடகாடு, நல்லாண்டார்கொல்லை போன்ற இடங்களி
லும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fh09x7

Post a Comment

0 Comments