
தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை யில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயிறு தற்போது பரவ லாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட உளுந்து பயிறுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் ஆண்டுதோறும் சம்பா, தாளடி சாகுபடிக்கு பிறகு, பரவலாக உளுந்து சாகுபடி செய்யப்படும். மேலும், பேராவூரணி, சேதுபாவா சத்திரம் உள்ளிட்ட சில இடங் களில் தென்னந்தோப்புகளில் ஊடு பயிராகவும் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. உளுந்து பயறு விதைப்பு செய்யப்பட்ட 70 நாட்களில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி விடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eENGTk
0 Comments