
கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கிற்கு பிறகு கரோனா தொற்று குறைந்து வருகிறது என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா தொற்றுநோயாளிகள் குறித்து தமிழகவேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் ஆய்வுக்கூட்டம் நடந்தது.தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலும் கூடுதலான என்ன வசதிகள் செய்யவேண்டும் என்பது குறித்து அமைச்சர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RTIJxx
0 Comments