
சென்னையில் மயானங்களுக்கு வரும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றைக் கொண்டுசெல்ல காலியாக இருக்கும் மயானங்கள் குறித்த விவரங்களை அறிய முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
சென்னையில் கடந்த 5 நாட்களில் மட்டும் கரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 295 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்காக வரும் வழியிலும், மருத்துவமனை கிடைக்காமல் சுற்றி வந்து இறப்போர், கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாமல் வீடுகளில் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xWCSaR
0 Comments