
மதுரை ஆவினில் ரூ. 13.71 கோடிவரை நடந்த முறைகேடு தொடர்பாக, 2 உதவி மேலாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆவினில் 2020 ஏப்ரல்முதல் 2021 மார்ச் வரை பொதுமேலாளராக ஜனனி சவுந்தர்யா என்பவர் பொறுப்பு வகித்துள்ளார். இக்காலகட்டத்தில் பால், நெய், வெண்ணெய் உற்பத்தி செய்து விற்றதில், போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதன்மூலம் ஆவின் நிர்வாகத்துக்கு இழப்புஏற்படுத்தியதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, ஜனனி சவுந்தர்யாபணியிட மாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும், கூடுதல் பொது மேலாளர் பொறுப்பு வகித்த ராமநாதன் என்பவர் தலைமையிலான குழுநடத்திய விசாரணையில், நெய் விற்பனையில் மட்டுமே ரூ.5.60 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2R7gNFS
0 Comments