
புதுச்சேரியில் 18 வயதில் இருந்து 45 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி, கோரிமேடு பல் மருத்துவக் கல்லூரி, கோரிமேடு இஎஸ்ஐ மருத்துவமனை, கோரிமேடு அரசு நெஞ்சக மருத்துவமனைகளில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்தும் அருகருகே உள்ளன.
“பகல் 12 மணிக்கு மேல் ஊரடங்கு உள்ளது. கிராமப் பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு ஊர் திரும்புவதில் பிரச்சினை உள்ளது. போதிய போக்குவரத்தும் இல்லை. தடுப்பூசி போட வீட்டில் உள்ளோருடன் வர வேண்டியது தொடங்கி பல பிரச்சினைகள் பெண்களுக்கு உள்ளன. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அந்தந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு மையங்களில் தடுப்பூசி போடப்படுகின்றன. அவர்கள் இலகுவாக சென்று போட்டு வருகின்றனர். அதே போல் அந்தந்த பகுதியிலேயே நாங்களும் தடுப்பூசி போட அரசு ஏற்பாடு செய்தால் அதிமானோர் தடுப்பூசி போட முடியும்" என்று இளைஞர்கள் மற்றும் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wohNEy
0 Comments