
முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்றால், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம் மட்டுமே வழங்கப்படும். முழுகட்டணத்தையும் அரசு ஏற்காது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கரோனா பரவல் அதிகரித்த நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கும் கரோனா சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் குறைவான பாதிப்பு உள்ளவர்களுக்கு தினமும் அதிகபட்சமாக ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15 ஆயிரம் வரையும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் அட்டை வைத்துள்ளவர்கள் கட்டணமின்றி கரோனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று அரசு அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SHQWVC
0 Comments