
தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் இன்று (மே 10) முதல் வரும் 24-ம் தேதி வரை 2 வார காலம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை, மீன், இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உப்பு அத்தியாவசிய உணவு பொருட்களில் ஒன்றாக உள்ளது. எனவே, உப்பு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், உப்பளங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை அனுமதிக்க வேண்டும் என, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3f6uL2P
0 Comments